திருமணம் நடக்க ``குருபலம்" அவசியமா? / Exclusive Article
அ வசியமில்லை. முதலில் குருபலம் என்பது வேறு, கல்யாண யோகம் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தனது பிள்ளைக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்பதை அறிய வட தமிழகத்தில் குருபலம் இருக்கிறதா என்றும், தமிழகத்தின் தென் பகுதியில் வியாழநோக்கம் வந்துவிட்டதா என்றும் ஜோதிடரிடம் கேட்பது வழக்கம். ஜென்ம ராசிக்கோ அல்லது ஜென்ம லக்னத்திற்கோ குரு பகவான் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமர்வதை குரு பலம் என்று அழைக்கிறார்கள். 5, 7, 9 ஆகிய இடங்களில் அமரும்போது குருபகவானின் பார்வை பலம் அந்த ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ கிடைக்கிறது. இந்த குருபலம் அல்லது வியாழ நோக்கம் என்பது சிறுபிள்ளை முதல் முதியவர்வரை எல்லோருக்கும் வரும். அதற்காக இவர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்துவிடும் என்று பொருள் கொள்ள முடியுமா? கு ருபலம் இருப்பவர்கள் தாங்கள் கையில் எடுக்கும் செயலை விரைந்து செய்ய இயலும். அந்தந்த வயதிற்கு ஏற்றபடி, அவரவருடைய விருப்பங்கள் நிறைவேற குருபலம் துணை நிற்கிறது. அதேநேரத்தில் கல்யாண யோகம் என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அவரவர் ஜாதகத்தின்படி ஜென்ம லக்னத்தி...