அனைவரையும் ரக்ஷிக்கும் ரங்கநாதர் / அனந்த விரதம் - 06.09.2025
மூலவர், ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் அ னந்த விரதம் என்பது மத்வ மக்களால் பெரிதும் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதமாகும் . இதற்கான தனியாக பூஜா பந்தந்திகளும் இருக்கின்றன . அது அனைவருக்கும் தெரிந்ததே !. அனந்த விரதத்தை முன்னிட்டு நாம் இந்த தொகுப்பிலே , திருத்தண்டுரை என்னும் ஊரில் அனந்த சயன பெருமாளை தியானிப்போம் ! நின்ற, அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் பெருமாள், நாம் சொல்லும் குறைகளை அல்லது வேண்டுதல்களை மிக விரைவாக தீர்த்துவைப்பதாகவும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் தாமதப்படுத்துவதாகவும் ஒரு கூற்று பக்தர்களிடத்தில் நிலவி வருகின்றது. காரணம், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால், பக்தர்களின் வேண்டுதலை சற்று தாமதம் செய்கிறாராம். இது தவறான கூற்று. இன்னும் சொல்லப் போனால், சிறிய பரிகாரங்களைகூட எதிர்பார்க்காமலும், பக்தர்கள் செய்கின்ற (மொட்டையடித்தல், விரதம் இருத்தல்) வேண்டு...