மடி பிரார்த்தனையும் குழந்தை வரமும் / கும்பகோணம் ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி
நன்றி: புகைப்படம், கோபால நிவாசம் வ ஹ்னி முனிவரின் புதல்வர்களான கோபிலர், கோபிரளயர் என்ற இருவருக்கும், பிருந்தாவனத்தில், தான் நிகழ்த்திய 32 லீலைகளையும் கண்ணன் நிகழ்த்திக் காட்டிய தலம் மன்னார்குடி. கண்ணன் காட்டிய 32வது கோலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன் திருக்கோலம் . பெருமாள் அத்திருக்கோலத்திலேயே இத்தலத்தில் நிலைகொண்டார். இதனாலேயே இத்தலம் தட்சிண துவாரகை என அழைக்கப்படுகிறது. இத்தலம் 154 அடி உயர ராஜகோபுரம், 7 பிராகாரங்கள், 16 கோபுரங்கள், 24 தெய்வ சந்நதிகள், நெடிதுயர்ந்த மதில்கள், அழகான மண்டபங்கள் கொண்டு கலைப் பொக்கிஷமாய் திகழ்கிறது. செண்பக மரங்கள் நிறைந்திருந்த இடமாதலால் செண்பகாரண்யம் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் காணப்படும் ஒற்றைக் கல்லால் ஆன கருட கம்பம் வியப்புடன் தரிசிக்க வேண்டிய ஒன்று. மூலவர், ஸ்ரீதேவி - பூதேவி சமேத வாசுதேவர் எனவும் உற்சவர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்றும் வணங்கப்படுகிறார். உ ற்சவ மூர்த்தி, கோபாலசுந்தரி எனும் அம்பிகை உபாசனையில் போற்றப்படும் லலிதாம்பிகையும் கண்ணனும் சேர்ந்த வடிவில் திரிபங்க நிலையில் தரிசனமளிக்கிறார். தாயார் (மூலவர்), செண்பகலட்சுமி என்ற பெயரிலும