குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்? / ஆன்மீக தகவல்கள்


சாதாரணமாக, ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை.

ஏழேழு ஜென்மம் என்பது 7X7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு.

49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13.

இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்மகாலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது.


அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழிவழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்துவிடும்.

ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்நது கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பலருக்கு குலதெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?

இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம். முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குலதெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு முறையாவது தமது குலதெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள்.வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும்.


தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குலதெய்வம் யார் என்பதைக் கூறி குலதெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல, எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குலதெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குலதெய்வம் என்ற கருத்தை மறந்துவிட்டார்கள். திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகிவிட்டது.

ஆனால் வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குலதெய்வத்தை தேடுவார்கள். அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள்.

ஆனால், தம்முடைய குலதெய்வத்தை நினைக்க மாட்டார்கள். என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குலதெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பதற்கு சமம் என்பது தெரிவது இல்லை. அதனால் அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது.


குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ்

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

திருமண நிச்சயம், குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. அத்தகைய நடைமுறை திருமணமாகும் தம்பதிகளுக்கு எல்லாவித தோஷத்தையும் போக்கும்.

ஆகையால், நிச்சயம் வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு அவசியம் செய்தே ஆக வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 15.11.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்