கை மேல் பலனை தந்தருளும் கையிலாயநாதர்


 கை மேல் பலனை தந்தருளும் கையிலாயநாதர்

கையிலாயநாதர்

வேலூரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், அணைக்கட்டு தாலுக்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் அருள்மிகு "உமா மகேஸ்வரி உடனுறை கைலாய நாதர்" திருக்கோவில்.

ஸ்தல வரலாறு

 இத்திருத்தலம் கி.பி 10-ஆம் நூற்றாண்டு, அதாவது  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும்

தற்போது பெங்களுரில், அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதியான, ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய, சித்தர் ஒடுக்கத்தூர் மகான் அவர்கள் தங்கி வழிபாடு செய்த ஆலயம்

காலப்போக்கில் ஒடுக்கத்தூர் மகான் சென்றுவிட, வழிபாடு குன்றிய நிலையில், எம்பெருமானே ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி சிதிலமடையச் செய்துள்ளார்

உற்சவர் 

இத்தலத்தின் அடியில், பல சித்தர்கள் தியானத்தில் இருக்கின்றனர். மேலும், மகாகுரு அகத்தியரும், சித்தர் காகபுஜண்ட முனியும் வந்து தங்கி செல்கின்றனர். மாணிக்கவாசகரும் இத்தலத்தில் வந்து தங்கி மனிதர்களைப் போலவே சுற்றிவருகிறார் என்று வரலாறு கூறுகிறது

சித்தர் ராமலிங்க ஸ்வாமிகள் மற்றும் சித்தர் திவ்யமுனி ஆகிய இருவரும் இத்தலத்தின் அடியில் ஜீவசமாதி கொண்டிருக்கிறார்கள். காசிக்கு நிகரான ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. காசிக்கு சென்றால் எப்படி பாவங்கள் விலகுமோ அதுபோன்று, இத்திருத்தலத்திற்கு வந்து எம்பெருமானை தரிசித்தல் பாவங்கள் விலகும்

கோயில் அருகில் "உத்திர காவிரி" என்னும் நதி இருக்கிறது. காசியில் இருக்கும் கங்கை நதியானது, தெற்கு புறமாக கைலாயநாதர் கோயிலை தொட்டு வடக்கு புறமாக செல்கிறது. இது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இத்தலத்தில் ரம்பைக்கும், ஊர்வசிக்கும் சாபவிமோச்சனமளித்ததாகவும் கூறப்படுகிறது.




 கைலாய நாதரை வழிப்படும் நாகம்

 நாகம் (சர்ப்பம்) ஒன்று தினமும், கைலாய நாதரை தரிசித்து வருகிறது. இந்த நாகம், அவ்வளவு எளிதில் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லையாம். அப்படி சிலருக்கு காட்சி தரும் நாகம், சிவஹரி என்னும் பக்தருக்கு விஸ்வரூபத்தில் அதாவது, நாகத்தின் வால் தரையில் படும்படியும், தலை வானத்தை நோக்கி படம் எடுத்து காட்சி தந்துள்ளது நாகம். இந்த நாகம் கைலாய நாதருக்கு காவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 நாகத்தை நேரில் கண்ட பக்தர்

 மூன்றாவது பிரதோஷம் அன்று கோயிலின் மதில் சுவற்றின்  மீது நாகம் வந்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் முதல் முதலில் நாகத்தை பார்த்தேன். அதன் பிறகு அடிக்கடி என் கண்களில் நாகம் தென்பட ஆரம்பித்தது. இரவு சுமார் 11.30 மணி அளவில், கோயிலின் உள்ளே முழு நீள நான்கரை முதல் ஐந்து அடியில்  நாகத்தை கண்டேன். இந்த கோயிலுக்கு நான் வந்த பின்னர்  உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும்  பல மாற்றங்களை என்னுள் கண்டேன். மேலும், பணம் சேர்த்து வீடு ஒன்றை கட்டினேன். அதில் குடியேற முடியாமல் அவதிப்பட்டேன். கைலாயநாதரை வேண்டிக்கொண்டேன் தடை விலகி குடியேறினேன் என்றார் யோகானந்தம் என்னும் பக்தர்.




சிதிலமடைந்த கைலாய நாதர் திருக்கோவில்

 சித்தர் ஒடுக்கத்தூர் மகான் சென்ற பின், இத்தலம் பூஜிக்க படாமல் கோவில் சிதிலமடைந்துவிட்டது. அதன் பிறகு மக்கள் இங்கு வர அச்சப்பட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்த கோவில், இங்கு  இருப்பதே தெரியாமல் போய்விட்டது. தை பொங்கலன்று மட்டும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இவ்வூரில் வசித்துவரும் கலைச்செல்வி என்னும் பக்தையின் கனவில் தோன்றிய கைலாயநாதர், தனக்கு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார்




தன் கனவில் தோன்றிய கைலாயநாதர் பற்றியும், கோவில் கட்டும்படி உத்தரவிட்டதையும் கிராம மக்களுக்கு கலைச்செல்வி தெரிவித்தார். இதனையடுத்து, ஊர் மக்களோடு இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார் கலைச்செல்வி. 15 ஆண்டு காலமாக கைலாயநாதரை பராமரித்தனர். ஊர் மக்களால், கிட்டத்தட்ட 65 லட்சம் செலவில், கோவிலின் கருவறை, விமானம் ஆகியவை அமைக்கப்பட்டது.

 விரிவுப்படுத்த நன்கொடை தேவை

 இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற இந்த புண்ணிய திருத்தலத்தின் திருப்பணி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு  நன்கொடை தேவைப்படுகிறதுஎம்பெருமான் திருப்பணிக்கு தங்களால் (மக்கள்) இயன்ற உதவிகளை செய்யும் படி கைலாயநாதர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.





 விவரம்:

அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர்,

திருக்கோவில்,

A/C No:6655846738,

IFSC CODE:IDIB000O001,Indian Bank-Odugathur Branch

Bank Account Name: Arulmigu Umamaheswari Udanurai Kailayanathar Temple Trust.

Phone Pay and Google Pay Number:8695875868

 

முகவரி:

அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர்,

திருக்கோவில்,

பாக்கம் வில்லேஜ்,

பாக்கம் பாளையம் போஸ்ட்,

குருவராஜா பாளையம் (வழி),

அணைக்கட்டு தாலுக்கா,

வேலூர் மாவட்டம்-632107

செல்:8695875868, 9345883326

கருத்துகள்