ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள்
1. திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம்: 1மணி நேரம்
காலை 6 மணி
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்க வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.
பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
2. ஆலங்குடி (குரு):
தரிசனம் நேரம்: 1மணி நேரம்
காலை 7.30மணி
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
3. திருநாகேஸ்வரம் (ராகு):
தரிசனம்
நேரம்: 1மணி நேரம்
காலை
9.30
பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
4. சூரியனார்
கோவில் (சூரியன்):
தரிசனம்
நேரம்: 1மணி நேரம்
மதியம்
11.00மணி
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5. கஞ்சனூர் (சுக்கிரன்):
தரிசனம்
நேரம்: 1மணி நேரம்
மதியம்
12.15
6. வைத்தீஸ்வரன்
கோயில் (செவ்வாய்):
தரிசனம்
நேரம்: 1மணி நேரம்
மாலை
4மணி
மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7. திருவெண்காடு
(புதன்):
தரிசனம்
நேரம்: 45 நிமிடம் நேரம்
மாலை:
5.15மணி
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
8. கீழ்பெரும்பள்ளம்
(கேது):
தரிசனம்
நேரம்: 45 நிமிடம் நேரம்
மாலை
6.15மணி
9. திருநள்ளாறு
(சனி):
தரிசனம்
நேரம்: 1மணி நேரம்
இரவு
8.00மணி
நவகிரக
ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான்
வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை
திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள்
வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம்
அடைந்து விட முடியும். அதன்
பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில்
சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்
தரிசிக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக