துளசி இலையை, ஏன் காதுக்குப் பின்புறம் வைக்கிறார்கள்?
காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்கு இக்காலத்தில் யாரும் தயாராகமாட்டார்கள். அப்படி சூடுபவர்களை ‘காதில் பூவைத்தவன்’ என்று ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால், காதுக்குப் பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குப் பின்புறம் ஆகும் என்பது விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது.
துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப் பின்னுள்ள சரும வழியாக ஊடுருவிச் செல்லும். இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசியிலையை சூடிவந்ததும், அதன் பின், சந்ததிக்கு அதைக் கற்பித்ததும் வந்தார்கள்.
துளசி செடிக்குப் பக்கம் அசுத்தமாகச் செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும். துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது ‘ப்ரஸீத துளசி தேவி ப்ரஸீத ஹரி வல்லபே க்ஷீரோத மதனோத்புதே துளசி த்வாம் நமாம்யஹம்’ என்று மந்திரம் சொல்ல வேண்டும். துளசிப்பூ பறிக்கும் போது ‘துளஸ்வமத ஸம்பூதா சதா தவம் கேசவ பிரியே கேச வார்த்தம் லுனமி த்வாம் வரதா பவ சோபனே’ என்னும் மந்திரத்தை சொல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக