தசமானோற்சவ விழா உடுப்பில் நடைபெற்றது / ஸ்ரீஷாபட்டுக்கு விப்ர பூஷன் விருது.

காடேகாரு ஸ்ரீஷாபட்டுக்கு விப்ர பூஷன் விருது வழங்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடைபெற்ற,  ``ஸ்ரீ ராம் சேவா பாலகா’’ என்னும் அமைப்பின் சார்பில், தசமானோற்சவ விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியான, 10-வது ஆண்டு ``விப்ர சமாஜ் பாந்தவ் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள்’’ கடந்த 18-5-2024 சனிக் கிழமை மற்றும் 19-5-2024 ஞாயிற்றுக் கிழமைகளில் உடுப்பியில் உள்ள ``மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில்’’ வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இப்போட்டியில், ``சாளகிராம நண்பர்கள் அணி’’ முதலிடத்தைப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில், உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ``விப்ர பந்தர்கள் குழு’’ பங்கேற்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், உடுப்பி சட்டப் பேரவையின் முன்னாள் எம்.எல்.ஏ ரகுபதிபட் பங்கேற்றார். 

மேலும், காடேகாரு ஸ்ரீஷாபட் அவர்களுக்கு, ஸ்ரீ ராம் சேவா பாலகா அமைப்பினரால், ``விப்ர பூஷன் விருது’’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

போட்டியில் வென்ற சாளகிராம நண்பர்கள் அணியினருக்கு கோப்பை வழங்கப்படுகிறது. 

இவ்விழாவில், உடுப்பி யுவ பிராமண பரிஷத் தலைவர் சந்திரகாந்தாபட் மற்றும் விஷ்ணுபடிகர், ராகவேந்திர கொண்டஞ்சா ஆகிய நிர்வாகிகளும்,  ஸ்ரீராம சேவா பாலக தலைவர் சந்திரசேகர ஆச்சார்யா, செயலாளர் ராஜேஷ் உபாத்யாயா, செயலாளர் ராமச்சந்திர கோடாஞ்சா, பொருளாளர் அசோக் ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை, பிரபல வர்ணனையாளர் சிவநாராயணன் தொகுத்து வழங்கினார்.

தேதி: 20.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்