ஜோதிடத்தில் ஓர் தவறான கண்ணோட்டம் / விளக்குகிறார்: கிருஷ்ணாச்சார்
நான் ஜோதிடர். பலரின் ஜாதகங்களை பரிசீலனை செய்த அனுபவத்தை வைத்து, ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
பெண்ணை பெற்ற பல பெற்றோர்கள்; தங்களின் பெண்களுக்கு திருமணம் இந்த ஜன்மத்தில் ஆகுமா? என்ற கேள்வியுடன் என்னிடம் வருகிறார்கள்.
27 - நட்சத்திரங்களுமே நல்லவைகள்தான். பிரபல ஜோதிடர் பி.வி.ராமன், புஷ்ய என்னும் பூச நட்சத்திரமே முதன்மையானது என்று கூறி உள்ளார்.
வேண்டாத நட்சத்திரங்கள்: மூன்று
ஆயில்யம், மூலம், கேட்டை - முதல் பாதம் மட்டும் தவிர்க்கவும்.
ஆனால், ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பது மிகமிக தவறு.
மற்ற பாதங்கள் உத்தமம். அதிலும், ஞாயிற்றுக் கிழமை பிறந்தால், எந்த பாதமும் பலமான தோஷமே. ஆனால், சந்திரன் மற்றும் சுபர் சேர்க்கை இருந்தாலோ, சுபர் பார்த்தாலோ, 3வது வீட்டில் சுபர் இருந்தாலோ, தோஷமே கிடையாது. யாரும் யாருக்கும் மரணத்தை தரமுடியாது.
ஆனால், மூலம் மாமனாருக்கு ஆகாது என்று கூறுவது மிகமிக தவறு.
அதே போல், கேட்டை - ஜியேஷ்டனுக்கு (அண்ணனுக்கு) ஆகாது என்பதும் தவறு.
மேலும், விசாகம், கனிஷ்டனுக்கு (தம்பிக்கு) ஆகாது என்பதும் மிக பெரிய தவறாகும்.
4ம் பாதம் மட்டும் தோஷம்.
மற்ற பாதங்கள் உத்தமம். ஆனால், சந்திரன் மற்றும் சுபர் சேர்க்கை இருந்தாலோ, சுபர் பார்த்தாலோ, 9வது வீட்டில் சுபர் இருந்தாலோ பார்த்தாலோ தோஷமே கிடையாது. பரணி நட்சத்திரம் - ஞாயிற்றுக்கிழமை பிறந்தால், எந்த பாதமும் பலமான தோஷமே. பரணிக்கு கேட்டை பொருந்தவே பொருந்தாது. இது பற்றி நாம் இன்னும் விரிவாக ஆராய்வோம்!
✒ மத்வ ஜோதிடர் கிருஷ்ணாச்சார்.
தொடர்புக்கு: 9443923584
தேதி: 24.06.2024
கருத்துகள்
கருத்துரையிடுக