பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பட்டின பிரவேசம் / சென்னையில் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தர்!

யோத்தி என்றாலே பாபர் மசூதி இடிப்புதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், 2024 ஜனவரி 22 - ஆம் தேதிக்கு பின்னர் அது மாறிவிட்டது. ஆம்! இப்போது, அயோத்தி என்றால், அழகான ஸ்ரீ பால ராமரின் முகமும், மீண்டும் உருவெடுத்த அயோத்தி ராமர் கோயிலும்தான் நம் நினைவுக்கு வருகிறது. அதற்கு மிக முக்கிய பங்காற்றிய, 2019ல் பிருந்தாவனமான உடுப்பி பெஜாவர் ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்தரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதே போல், அவரின் சீடரும் தற்போது பெஜாவர் மடாதிபதியுமான ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்தரும், குரு எவ்வழியோ... அதே போல், தொடர்ந்து பல இக்கட்டான சூழலை சந்தித்து, அயோத்தியில் ராமர் கோயில் அமைய அரும்பாடுபட்டவர். ஸ்ரீ பால ராமரின் ப்ரதிஷ்டையில் மிக முக்கிய பங்குவகித்தவர். தற்போது அவர் சாதுர்மாதம் விரதத்தை முன்னிட்டு வரும் 21.07.2024 முதல் 18.09.2024 வரை சென்னைக்கு வருகை தந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு  சிறப்பளிக்கவுள்ளார். நம் பத்திரிக்கைக்கும் பேட்டியினை தரவிருக்கிறார். அதன் தொடக்க நிகழ்ச்சியாக, வரும் 21.07.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் திருவல்லிக்கேணி ஸ்ரீ வியாசராஜா மடத்தில் நடைபெறவுள்ளது. மேலும், அதற்கு முன்னதாக, சுமார் 4.45 மணிக்கு பட்டின பிரவேசம் அதாவது பார்த்தசாரதி கோயிலை சுற்றி உள்ள மாட வீதிகளில் மிக பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. ஆகையால், அவரை சிறப்பிப்பது நமது கடமை. சென்னை வாசிகள் அனைவரும் தவறாது கலைத்துக் கொள்ளவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பிற மாவட்டம் மற்றும் மாநில பக்தர்களும் பங்குகொள்ளலாம். அனைவரும் வருக..! குருவின் அருளை பெறுக!     



தேதி: 17.07.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்