அல்லிக்கேணி ராஜா குழுவினரின் 25வது திருவிளக்கு பூஜை / தொடங்கி வைத்தார் ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர்!
இவ்வாண்டு சாதுர்மாதத்தை முன்னிட்டு, உடுப்பி ஸ்ரீ பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் அவர்கள் சென்னையில் வாசம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், கடந்த வெள்ளியன்று (23.08.2024) அல்லிக்கேணி ராஜா குழுவினர்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாகவும், அருள் மிகு கற்பக விநாயகர், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், செங்குந்த கோட்டம், நெசவாளர் தெரு, திருவல்லிக்கேணியில் 25வது திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர். மேலும் இவ்விழாவில், உடுப்பி ஸ்ரீ பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் கலந்துக் கொண்டு அருளாசி வழங்கினார்.
அவர் கூறியதாவது; அனைவருக்கும் உடுப்பி கிருஷ்ணனின் ஆசீர்வாதங்கள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். என்று ஆசீர்வதித்தார்.
முன்னதாக, உடுப்பி ஸ்ரீ பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தருக்கு, அல்லிக்கேணி ராஜா குழுவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் சிறப்பான வரவேர்ப்பினை அளித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக