பெருமாளின் வித்தியாசமான திருக்கோலம் / நச்சுனு 4 வரிகளில்!
* சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில் கபாலம் ஏந்தியிருக்கிறார்.
* பொதுவாக ஐந்து தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஏழு தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.
* திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.
* திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.
* தர்மபுரி கோட்டைக் கோயிலில், முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப்
போல் குத்திட்டு அமர்ந்திருக்கிறார்.
* காவேரிப் பாக்கம் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடனும் அட்சமாலை, அக்னி
ஏந்தி காலடியில் உள்ள மானுக்கு உபதேசம் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார்.
* வேலூர்
- ஆற்காடு அருகே, திருவலம் ஈசன் ஆலயத்தில் ஈசனின் கருவறை முன் ஜனக முனிவரின்
திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
* சென்னை
- பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் ஆலய அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல்
மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் அபய - வரதம் தரித்து
மகாலட்சுமி அம்சமாய் விளங்குகிறாள்.
* சிங்கப் பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள ஆப்பூர் மலையில் அருளும்
பிரசன்ன வெங்கடாஜலபதி த்ரிபங்க நிலையில் மகாலட்சுமியை தன்னுள் ஏற்று அருள்கிறார்.
அதனால் இவருக்கு பட்டுப் புடவையே சாத்தப்படுகிறது.
* வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கலையழகு கொஞ்சும் திருமண மண்டபத்தில் குழந்தை
வடிவில் தவழும் அற்புத விநாயகரை தரிசிக்கலாம்.
* கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள், உத்தானசயனம் எனும் படுத்திருந்து சற்று எழுந்திருக்கும்
பாவனையில் தரிசனம் அளிக்கிறார்.
* ஆனை
மலையில் உள்ள மாசாணியம்மன் முப்பதடி நீளத்தில் சயனித்த திருக்கோலம்
கொண்டிருக்கிறாள். இழந்த பொருளை திரும்பப் பெற மிளகாய் அரைத்துத் தடவும்
பிரார்த்தனை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
* வரகூரில் லட்சுமி ஹயக்ரீவர் தோற்றத்தில், திருமகளை மடியில் இருத்தி தழுவிய
நிலையில் லட்சுமி நாராயணர் காட்சியளிக்கிறார்.
* திருச்சி, லால்குடி அருகில், அன்பிலில் உள்ள சிவதலத்தில் அப்பர், ஞானசம்பந்தர்
பாடல்களை செவி சாய்த்துக் கேட்ட கோலத்தில் ‘செவிசாய்த்த விநாயகரா’கக் காணலாம்.
* பூம்புகார்
அருகே, சாயாவனம் தலத்தில் வில்லேந்திய வேலவனைக் கண் குளிரக் கண்டு வணங்கலாம்.
* திருவாரூர் தியாகராஜர் ஆலய முதல் பிராகாரத்தில் ஐந்து தலை நாகம் படுத்திருக்க அதன்
நடுவில் விரிந்த தாமரை மலரில் நடனமாடும் விநாயகரை தரிசிக்கலாம். யோக சாஸ்திரப்படி
குண்டலினி விநாயகராக இவர் போற்றப்படுகிறார்.
* திருநெல்வேலி, தென்காசி அருகில், இலத்தூர் ஆதீனம் காத்த ஐயனார் ஆலயத்தில் எமனையும்
அவன் மனைவி எமியையும் சிலை வடிவில் காணலாம்.
* மதுரைக்கு அருகே திருவாதவூர் ஆலய ஏரி, விஷ்ணு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த
ஏரியின் அளவைக் காட்டும் கம்பத்தின் மேல் உள்ள புருஷாமிருகத்தை (மனிதன் பாதி
மிருகம் பாதி) காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
* திருச்சி, திருப்பாச்சிலாசிரமம் தலத்தில் முயலகனுக்குப் பதிலாக பாம்பின் மேல்
நடனமாடும் நடராஜப் பெருமானை தரிசிக்கலாம்.
தேதி: 30.09.2024
கருத்துகள்
கருத்துரையிடுக