அனைத்து துன்பத்தில் இருந்தும் விடுபட நரசிம்மரை வேண்டுவோம்! / சிறப்பு தொகுப்பு

பிரகலாதனின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே திருமால் நரசிம்மப் பெருமானாக அவதாரம் எடுத்தார். தன்னை மனம் உருகி அழைப்பவர்களுக்கு, நொடியில் வந்து உதவி செய்வதை நரசிம்ம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது. அது மட்டுமின்றி, இறைவன் எங்கும் உள்ளார் என்பதை நரசிம்ம அவதாரம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மர் வழிபாடு பற்றிய சில சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

🛕 நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய ``திருஷ்டி தோஷமும்’’ ஏற்படாது.
🛕 நரசிம்மருக்கு ``சிவப்பு நிற அரளி’’ மற்றும் ``செம்பருத்தி’’ பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
🛕கணவன் - மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகிவிடும்.
🛕 நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று, கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.
🛕 நரசிம்மர் அருள் பெற, பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால், பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

🛕வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது, வாயு மூலை எனப்படும் ``வடமேற்கில்’’ வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
🛕நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று, வீட்டில் உள்ள சிறுவர் - சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால், பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.
🛕நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள், கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
🛕நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
🛕 நரசிம்மரை வழிபட்டு சென்றால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

🛕 நரசிம்மனிடம், பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
🛕 நரசிம்மரை `‘மருத்யுவேஸ்வாகா’’ என்று கூறி வழிபட்டால், மரணபயம் நீங்கும்.
🛕 `‘அடித்தகை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
🛕 நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில், ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
🛕 வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று, சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப் பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

🛕 நரசிம்மரின் அவதாரம், ``இறைவன் எங்கும் உள்ளார்’’ என்பதை உணர்த்துவதாகும்.
🛕 தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க, துயர் நீங்கி சுகவாழ்வு பெறுவார்கள்.
🛕 ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் ``இரணியவதை படலம்’’ ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்ககோயிலில் ``சிங்கமுக மண்டபம்’’ அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.
🛕 நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.
🛕 கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீயோக நரசிம்மர் சந்நதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும், கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 05.12.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்