திருமணம் நடக்க ``குருபலம்" அவசியமா? / Exclusive Article

வசியமில்லை. முதலில் குருபலம் என்பது வேறு, கல்யாண யோகம் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தனது பிள்ளைக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்பதை அறிய வட தமிழகத்தில் குருபலம் இருக்கிறதா என்றும், தமிழகத்தின் தென் பகுதியில் வியாழநோக்கம் வந்துவிட்டதா என்றும் ஜோதிடரிடம் கேட்பது வழக்கம். 

ஜென்ம ராசிக்கோ அல்லது ஜென்ம லக்னத்திற்கோ குரு பகவான் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமர்வதை குரு பலம் என்று அழைக்கிறார்கள். 

5, 7, 9 ஆகிய இடங்களில் அமரும்போது குருபகவானின் பார்வை பலம் அந்த ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ கிடைக்கிறது. இந்த குருபலம் அல்லது வியாழ நோக்கம் என்பது சிறுபிள்ளை முதல் முதியவர்வரை எல்லோருக்கும் வரும். அதற்காக இவர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்துவிடும் என்று பொருள் கொள்ள முடியுமா?

குருபலம் இருப்பவர்கள் தாங்கள் கையில் எடுக்கும் செயலை விரைந்து செய்ய இயலும். அந்தந்த வயதிற்கு ஏற்றபடி, அவரவருடைய விருப்பங்கள் நிறைவேற குருபலம் துணை நிற்கிறது. அதேநேரத்தில் கல்யாண யோகம் என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அவரவர் ஜாதகத்தின்படி ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்துள்ள கிரஹம் அல்லது ஏழாம் பாவகத்திற்கு அதிபதி கிரஹம் அல்லது ஏழாம் பாவகத்தோடு தொடர்பு உடைய கிரஹங்களின் தசாபுக்தி காலங்களில், கல்யாண யோகம் வரும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------ADVT


-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கல்யாணயோகம் எப்பொழுது வருகிறது என்பதை உங்கள் குடும்ப ஜோதிடரிடம் காட்டித் தெரிந்துகொள்ளுங்கள். குருபலம் இல்லாத காலத்திலும்கூட, ஜாதக ரீதியாக கல்யாணயோகம் வந்துவிட்டால் திருமணம் நடந்துவிடும். 

அதே நேரத்தில் கல்யாண யோகமும் இருந்து, குருபலமும் இணையும்போது, அந்த ஜாதகருக்கு வரன் தானாகத் தேடி வருகிறது, எதிர்பாராத விதமாக உடனடியாக திருமணமும் நடந்துவிடுகிறது. திருமண யோகத்திற்கு உரிய தசாபுக்தி நடந்தாலும், திருமணத்தடை உண்டாகிறது என்றால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் இருக்கலாம்.


வ்வாறு களத்திர தோஷம் உள்ளவர்களுக்கு திருமண யோகத்தோடு குருபலமும் இணையும்போது தடை நீங்கி திருமணம் நடைபெறும். குருபலம் இல்லை, அதனால் திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்று சொல்வது தவறு. குருபலம் இருக்கிறது, திருமணம் தன்னால் நடந்துவிடும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பதும் தவறு. 

இதையெல்லாம்விட, வரன் தேடி வந்தும் குருபலம் இல்லை என்று காரணம் சொல்லி திருமணத்தை தள்ளிப்போடுவது மிகமிகத் தவறு. திருமணம் நடக்க அல்லது திருமணத்தை நடத்த குருபலத்தைவிட கல்யாண யோகம் என்பதே அவசியம் என்பதே தெளிவான பதில் ஆகும்.

நன்றி: கோகுலாச்சாரி

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 10.07.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்