அதிசயவைக்கும் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள் / ஓர் சுவையான தகவல்கள்

1168 – 75 ➡︎ சுவாமி கோபுரம்

1216 – 38 ➡︎ராஜ கோபுரம்

1627 – 28 ➡︎ அம்மன் சந்நிதி கோபுரம்

1315 – 47 ➡︎ மேற்கு ராஜா கோபுரம்

1372 ➡︎ சுவாமி சந்நிதி கோபுரம்

1374 ➡︎ சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 ➡︎ ஆறு கால் மண்டபம்

1526 ➡︎ 100 கால் மண்டபம்

1559 ➡︎ சௌத் ராஜா கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்

1560 ➡︎ சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்

1562 ➡︎ தேரடி மண்டபம்

1563 ➡︎ பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 ➡︎ வடக்கு ராஜா கோபுரம்

1564-72 ➡︎ வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்

1569 ➡︎ சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்

1570 ➡︎ அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 ➡︎ வீர வசந்தராயர் மண்டபம்

1613 ➡︎இருட்டு மண்டபம்

1623 ➡︎ கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்

1623 – 59 ➡︎ ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 ➡︎ புது மண்டபம்

1635 ➡︎ நகரா மண்டபம்

1645 ➡︎ முக்குருணி விநாயகர்

1659 ➡︎ பேச்சியக்காள் மண்டபம்

1708 ➡︎ மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

1975 ➡︎ சேர்வைக்காரர் மண்டபம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் ➡︎ 1168 – 75.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் ➡︎ 1216 – 38.

பாராக்ரம பாண்டியன் ➡︎ 1315 – 47.

விஸ்வநாத நாயக்கர் ➡︎ 1529 – 64.


கிருஷ்ணப்பா நாயக்கர் ➡︎ 1564 – 72.

வீரப்ப நாயக்கர் ➡︎ 1572 – 94.

கிருஷ்ணப்பா நாயக்கர் ➡︎ 1595 – 1601.

முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் ➡︎ 1601 – 09.


முத்து நாயக்கர் ➡︎ 1609 – 23.

திருமலை நாயக்கர் ➡︎ 1623 – 1659.

ரௌதிரபதி அம்மாள் மற்றும்

தோளிமம்மை ➡︎ 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )

முத்து வீரப்ப நாயக்கர் ➡︎ 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.

முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.

விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.

மீனாட்சி அரசி -> 1732 – 36

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால்தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம்.

மதுரையில் பிறந்தாலும் 

மதுரையில் வாழ்ந்தாலும் 

மதுரையில் இறந்தாலும் 

மதுரையில் வழிபட்டாலும் 

மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை

கறவா பசு - பசுமலை

பிளிறா யானை - யானைமலை

முட்டா காளை - திருப்பாலை

ஓடா மான் - சிலைமான்

வாடா மலை - அழகர்மலை

காயா பாறை - வாடிப்பட்டி

பாடா குயில் - குயில்குடி

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 09.07.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்