நல்ல சிந்தனைகளை அருளும் சிந்தலவாடி யோக நரசிம்மர் / ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி - 21.05.2024

மூலவர், ஸ்ரீ யோக நரசிம்மர், அருகில் நர்த்தனமாடும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்,கீழே, உற்சவ மூர்த்தி நரசிம்மர்
திருச்சி - கரூர் செல்லும் வழியில், கருப்பத்தூர் என்னும் கிரமம் உள்ளது. இந்த கிராமம் காவேரி ஆத்தங்கரையை  ஒட்டி உள்ளது. இதனால், பலரும் காவேரி ஆத்தங்கரையில் தினமும் குளித்து வருவது வாடிக்கை. வண்ணான் தொழில் செய்யும் ஒருவர், தினமும் துணிகளை ஒரு குறிப்பிட்ட கற்கலில் அடித்து துவைத்து முடிந்ததும், தானும் குளித்து வந்தான். இப்படியாக நாட்கள் செல்ல, இரவில் தாங்கமுடியாத முதுகு வலி அந்த வண்ணானுக்கு ஏற்பட்டது.
 
அமைதியான சூழலில் கோயிலின் முகப்பு தோற்றம்
தனால், கடும் அவதிப்பட்டான். தினமும் துணிகளை  அடித்து துவைக்கும் கற்களின் பின்புறத்தில் நான் இருக்கிறேன் என சூட்சுமமாக கனவில் தோன்றி நரசிம்மப்பெருமான் தெரிவித்தார்.

து ஒருபுறமிருக்க கருப்பத்தூர் என்னும் கிராமம் அருகிலேயே  திருக்காம்புலியூர் என்கின்ற கிராமமும் உள்ளது. இங்கு, நரசிம்ம பக்தரான ஸ்ரீமுஷ்ணம் ஹரியாச்சார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரின் கனவிலும் தோன்றிய நரசிம்மர், காவேரி ஆத்தங்கரையில் குறிப்பிட்ட கற்களின் பின்னால் நான் இருக்கிறேன் என கூறினார்.

ண்ணான் காரரும், ஹரியாச்சாரும் கனவில் நரசிம்மப் பெருமான் கூறிய இடத்திற்கு செல்கிறார்கள். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். நடந்தவற்றை இருவரும் பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதன் பின்னர்,  அந்த குறிப்பிட்ட கற்களை குப்புறப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த கற்களில் யோக நிலையில் நரசிம்மர் இருந்திருக்கிறாா். பாா்த்த அடுத்த நொடி  இருவரும்  கைகளை தலைக்குமேல் உயர்த்தி `யோக நரசிம்மாய நமஹ... யோக நரசிம்மாய நமஹ... என வேண்டுகிறார்கள்.

தன் பின், இருவரும் 'யோக நரசிம்மரை' தலையில் வைத்தவாறு, திருக்காம்புலியூரை  நோக்கி பயணித்தனா். 'சிந்தலவாடி' என்னும் ஊர் வந்தவுடன் தலையில் வைத்துள்ள யோக நரசிம்மரின் பாரம் அதிகமாகிவிட்டது. இதனால், வலிதாங்காது யோக நரசிம்மரை சிந்தலவாடியிலேயே வைத்துவிட்டாா் ஹரியாச்சாா். சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் நரசிம்மரை தூக்கியுள்ளனா். அவர்களால், முடியவில்லை அளவிற்கு மீறிய பாரம். செய்வதறியாது இருவரும் திகைத்தனா். மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தரிடம் சென்று இதன் விவரங்களை கூறி தெளிவுபெறலாம் என திடீரென்று ஹரியாச்சாருக்கு யோசனை பிறந்தது.

கோவில் அருகிலேயே காவேரிக் கறை
ஸ்ரீ வியாசராஜரை சந்தித்த ஹரியாச்சாா், நடந்தவற்றை அனைத்தும் சொல்லி தீா்வைக் கேட்கிறாா். "ஹரி...உனக்கு இன்னுமா புரியவில்லை? காவேரிக் கறை ஓரமாக, தினமும் காவேரி நீறைக் கொண்டு, நிர்மாலிய அபிஷேகம், கந்தோதகஸ்னானம் செய்துக் கொள்ள, நம் நரசிங்க பிரபு இங்கே வாசம் செய்ய விரும்புகிறாா்" என்று மகிழ்ச்சி பொங்க வியாசராஜா் கூறினாா். "ஓ...அப்படியா...காவேரி ஓரம்...." என யோசித்தவாறு ஹரியாச்சாா் நின்றியிருந்தாா். "இதில் யோசிக்க என்ன இருக்கு ஹரி? சிந்தலவாடியில், காவேரி ஆற்றங்கரை அருகில் நான்தான் ஏற்கனவே முக்கியப்பிரானரை (அனுமாா்) பிரதிக்ஷடை செய்திருக்கிறேன் அல்லவா! அங்கு உனக்கு கிடைத்த 'யோக நரசிம்மரையும்' அங்கே பிரதிக்ஷடை  செய்வோம். அதையும், நானே செய்கிறேன்." என்றாா் வியாசராஜா். "அந்த ஹரி, இந்த ஹரியின் மூலமாக வியாசராஜரிடம் சென்று, தற்போது இங்கே பிரதிக்ஷடை  செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை காண  முப்பிறவியில் நான் கோடானகோடி புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்." என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா் ஹரியாச்சாா்.

கான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தரால் சுமார் 500 வருடங்களும் மேலான மிக பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். இந்த கோயிலில் நரசிம்ம ஜெயந்தி அன்று மூன்று நாட்கள் மிக விஷேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில், ஹரிவாயுஸ்துதி, விஷ்னுசகஸ்ரநாமம், புருஷஸூக்தம், நரசிம்மருக்கு ப்ரீதியான மன்யுஸூக்தம் போன்ற வேத மந்திரங்களோடு பால், தேன், நெய், தயிர், இளநீர், வெள்ளம், மற்றும் பல வகை பழங்களைக் கொண்டு பஞ்சாமிா்த அபிஷேகங்கள் நடைபெரும்.

பிஷேகங்கள் முடிந்த பின்னா், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மிக அழகாக, யோக நரசிம்மருக்கு அலங்காரங்களை செய்வாா் அங்கு பூஜை செய்யும் ஆச்சாா். நைவேதியம் ஆன பிறகு, மஹாமங்களாரத்தி காட்டப்படும். அதை காண்பதற்கு இருகண்கள் போதாது. பல குடும்பங்களுக்கு சிந்தலவாடி யோக நரசிம்மர் குல தெய்வமாக இருந்து அருளாசி வழங்குகின்றாா்.

யோக நரசிம்மரின் அருகிலேயே கோபாலாசுவாமியும் உள்ளாா். இவர்களின் அருகில் தனி சந்நதியில் முக்யபிரானா் (அனுமாா்) இருக்கிறாா். இது தவிர விநாயகா், நாகா்கள் இருக்கிறாா்கள்.

மேலும், யோக நரசிம்மா் கோயில் அருகில் நடக்கும் தூரத்தில் " வெங்கடாஜலபதி கோயில்’’ ஒன்றும் உள்ளது. இந்த கோயிலும் பழமையானதாகும். இங்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இக்கோயில் அருகில், கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மரை தரிசிக்க வருபவா்கள், வெங்கடாஜலபதியையும் தரிசித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக, ஸ்ரீ வெங்கடாஜலபதியும், கீழே அனுமார் மற்றும் லக்ஷ்மி நாராயண பெருமாளும், அதன் கீழே ஸ்ரீ ராகவேந்திர ஸ்மாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம்.
து மட்டுமல்ல, சிந்தலவாடியில் இருந்து மிக அருகில், கருப்பத்தூர் அதாவது, யோக நரசிம்மா் கிடைத்த ஊா். அங்கு சிம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சென்று சிம்மபுரீஸ்வரர் மற்றும் தயாா் சுகுந்த குந்தாளம்பாளை தரிசித்து செல்வதும் வழக்கம்.

சிம்மபுரீஸ்வரர் கோயில்
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, லாலாப் பேட்டைக்கு அடுத்ததாக சிந்தலவாடி இருக்கிறது. மாநகர பேருந்துகள் மட்டுமே இவ்விடத்தில் நின்று செல்லும். ஆகையால், திருச்சியில் இருந்து கரூா், ஈரோடு, கோவை ஆகியப் பேருந்துகளில் பயணித்து, குளித்தலை அல்லது லாலாப் பேட்டையில் இறங்கி மாநகர பேருந்துகளில் பயணிக்க வேண்டும். லாலாப் பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் செல்கிறது, அதிலும் பயணிக்கலாம்.  

கோயிலின் நேரம்: காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை. மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை.

✎ ரா.ரெங்கராஜன்

தேதி: 21.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்