வளத்தை வாரி வரமருளும் வலம்புரி / Re - Post

  

வளத்தை வாரி வரமருளும் வலம்புரி

 

வலம்புரி சங்கு ஓர் அறிமுகம்:

  கடலில் வாழும் உயிரினங்களில்கிளிஞ்சல் வகை புழுக்கள் தன்  பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு

 இதில்வலம்புரி சங்கு என்பது சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்புவலப்புறமாக சுற்றிசங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கேவலம்புரி சங்காகும்.

 சங்குகள்  வகைகளில் காணப்பட்டாலும் ``வலம்புரிச்சங்கு'' சிறப்பு தன்மையுடையதாக கருதப்படுகிறது.  

 இவை வலது பக்கம் சுழிந்து காணப்படும்

 மக்களின் புனிதமாக கருதப்படுகிறது

 வளத்தையும்நலத்தையும் தருவதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

 இதன் காரணமாகஇந்த வலம்புரி சங்கினை அதிகதொகை கொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

கேரள அரசு சின்னம்

அரசு சின்னங்களிலும் வலம்புரி சங்கு:

 ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால்கேரள அரசு சின்னத்திலும்சிக்கிம் அரசு சின்னத்திலும்திருவிதாங்கூர் கொடியிலும் வலம்புரி சங்கு இடம்பெற்றிருக்கிறது.

  ஆம்கேரள அரசு சின்னத்தில்இரண்டு யானைகளின்  நடுவில் ஸ்ரீ பத்மநாபஸ்வாமியின் சங்கை காண்பது போல வலம்புரி சங்கு அடையாளப்படுத்துகிறதுஅதற்கு மேல்நான்கு முகங்களை கொண்ட தேசிய சின்னமாகிய சாரநாத் சிங்கம் இடம்பெற்றுள்ளது

 சிக்கிம் அரசு சின்னத்தில்மேலே முதலில் வலம்புரி சங்குதான் இருக்கும்.

சிக்கிம் அரசு சின்னம்

 அதற்கு அடுத்தபடியாகமுழு சிவப்பு நிறத்தில் நடுவில் வலம்புரி சங்கு இடம்பெற்றியிருக்கும் இது  திருவிதாங்கூர் நாட்டின் சின்னமாகும்.

திருவிதாங்கூர் நாட்டின் சின்னம்

வலம்புரி சங்கின் சிறப்பு:

 மாதங்களில் விசேஷமான கார்த்திகை  மாதத்தில்ஒவ்வொரு  திங்கட்கிழமையில்  சிவலிங்கத்திற்கு சங்காபிஷேகம் செய்வது சிறப்பு.

 கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமைசிவலிங்கத்திற்கு செய்யப்படும் சங்காபிஷேகம் குறித்தும்வலம்புரி சங்கை பற்றியும் பல ஞான நூல்கள் குறிப்பிட்டுள்ளன

 ஆன்மீகத்திலும்பூஜைகளிலும்பூஜை அறைகளிலும் வலம்புரி சங்கு முக்கியவையாக பார்க்கப்படுகிறது.

  வலம்புரி சங்கினை காதில் வைத்துக் கேட்டால்  ‘ஓம்’ என்ற சப்தம் கேட்கும்.


வலம்புரி சங்கின் பயன்கள்:

 எங்கு வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கு குபேர கடாக்ஷம் நிறைந்து இருக்கும்  என்கிறார்கள் ஆன்மீக சிந்தனையாளர்கள்

  வலம்புரிச் சங்கில்கொஞ்சம் தீர்த்தமும்துளசியும் இட்டு  பூஜை செய்து வந்தால்முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என  வேத நூல்கள் கூறுகிறது.

  அதே போல்வலம்புரி சங்கைக்கொண்டு விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நம் மனமானது நிம்மதியடையும்.

 தினமும் சண்டைகள் நடக்கும் வீட்டில்அமைதி நிலவும்

 கடன் பிரச்னைகள் தீரும்.  

 செவ்வாய்க்கிழமைகளில்முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கும்அங்காரகனுக்கும்  வலம்புரிச்சங்கை  கொண்டு பாலாபிஷேகம் செய்து வந்தால்செவ்வாய் தோஷம் நீங்கிவிரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

✦ மேலும், வலம்புரி  சங்கில்  பால் வைத்து, 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்து வணங்கினால்எல்லா தோஷங்களும் நீங்கி  திருமணம்  நடைபெறும்

 வலம்புரி சங்கிற்கு பௌர்ணமி தினத்தன்று பாலாபிஷேகம் செய்தால் சந்திர பகவானின் அருளையும் பெறமுடியும்.

 தினமும் இந்த வலம்புரி  சங்கில் தண்ணீர் வைத்துதுளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.

 பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கத்தால்  பால்  புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும்அதோடு கண்திருஷ்டி ஏற்படாது.


சங்கிற்கான காயத்ரி மந்திரம்:

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே

பவமானாய தீமஹி

தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்

சங்கிற்கான காயத்ரி மந்திரங்களில் ஒன்றாகும்இதைத் தினமும் ஸ்நானம் செய்த பிறகு 12 முறைகள் சொல்லி  தூபம்நைவேத்தியம்தீபம் போன்றவற்றை  செய்து வரலாம்

வலம்புரி சங்கை பராமரிக்கும் முறைகள்:

 சங்கை ஒரு மரப்பெட்டியில் மஞ்சள் பட்டு வஸ்திரம் அல்லது சிவப்பு வெல்வெட் துணி விரித்து அதில்தான் வைக்க வேண்டும்.

 இல்லையென்றால்அதற்கான செம்பு அல்லது வெள்ளி ஸ்டாண்டில் அதைத் தென்வடலாக வைக்க வேண்டும்

 தினமும் காலையில் அதைச் சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்துபொட்டிட்டுமலர்தூவிகற்பூர ஆரத்தி காட்டிசங்கத்திற்கான காயத்ரி  மந்திரத்தை சொல்லி  வரலாம்.


எச்சரிக்கை:

 பொதுவாக வலம்புரி சங்கினை காலியாக இருக்க வைக்க கூடாது

 தரையில் வைக்கவே கூடாது

 வலம்புரி சங்கிற்கு  தண்ணீரை  கொண்டாவது அபிஷேகம் செய்ய வேண்டும்

 வலம்புரி சங்கின் மீது அழுக்குதூசி படிய விடக்கூடாது

  சங்கு கடலில் இருக்கும் பொருள்அதனை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் துர்வாடை ஏற்பட்டு வீட்டிற்கு கேடு ஏற்படலாம்.

 ஆகையால்அபிஷேகம் செய்யவில்லை என்றாலும்தினமும்   துணிகளினால் அவசியம் சுத்தம் செய்யவேண்டும். (புதிய துணியாக இருக்க வேண்டும்)

இவைகளை பின்பற்றிபூஜித்து வந்தால் நிச்சயம் வலம்புரி  வளத்தை வாரி வழங்கும்.

✏ ரா.ரெங்கராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 25.11.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்