வாழ்வில் உயரங்களை எட்ட உதவும் உயரமான ஆஞ்சநேயர் / அனுமன் ஜெயந்தி - 30.12.2024


திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர்இங்கு, 37 அடி உயரத்தில் மிக பெரிய ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்இதை கேள்விப்பட்ட நாம்ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க சென்றோம்

ஸ்ரீரங்கமே அழகிய ஊராக காணப்பட்டதுஅங்கிருந்துஆஞ்சநேயர் கோயில் எங்குள்ளது என கேட்டவாறு பயணித்தோம்வழி நெடுக்க 

மரங்களும்செடிகளும் சூழ்ந்து அழகாக காணப்பட்டதுஎங்களை போலவே பலரும் கோவிலுக்கு செல்ல வழி கேட்டார்கள்அவர்களுடன் நாமும் நம் பயணத்தை தொடர்ந்தோம்கோயிலுக்கு செல்லும் வழியில்மணித்தோப்பு என்னும் இடத்தை கண்டோம்பச்சை பசேலாக காட்சியளித்ததுசில பறவைகள் பறந்துக் கொண்டிருந்தன.

ங்காங்கேமயில்கள் சுற்றித்திரிந்தனபின்புறம்கதிரவனின் அழகான தோற்றம்வயலின் நடுவில்வயதான முதியவர் ஒருவர் வேலை செய்துக்கொண்டிருந்தார்அவரின் அருகில் சென்று  கோவிலுக்கு செல்ல வழிக் கேட்டோம்.  

வர் கூறியபடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றடைந்தோம்கோவிலின் தூரத்தில் இருந்தே, 37அடி  ஆஞ்சநேயர் கம்பீரமாக வீற்றியிருப்பதை கண்டோம்கோவிலின் உள்ளே சென்றதும்மரங்கள் காற்றில் அசைந்து ஆடி நம்மை வரவேற்றது போல் இருந்ததுஎங்களைகோவில் நிர்வாகிகளிடம்  அறிமுகப்படுத்திக்கொண்டோம்அவர்களில்ஒருவர் நமக்கு கோவிலை சுற்றிக்காட்டினார்.

முதலில்கோவில் சுற்றி உள்ள நரசிம்மர்சக்கரத்தாழ்வார்கல்யாணக்கோலத்தில் உள்ள  ராமர்சீதைலட்சுமணன்அனுமார் ஆகிய சுவாமிகளை தரிசித்தோம்மரங்களின் நடுவில்கூரைகளை அமைத்துகீழே கால்களை  மண்கள்சூழ்ந்து கொண்டும்என முழுமையடையாத,கட்டடங்கள் இல்லாத  சந்நதிகளாக இருந்தன.

வைகளை காணும் போது இப்படியே இயற்கையோடுகட்டடம் இல்லாத சந்நதிகளாக  இருந்துவிடலாம் என தோன்றியதுபக்தர்கள்இந்த சந்நதிகளின்  முன்பாக விளக்கேற்றி வழிபடுகின்றார்கள்ஆஞ்சநேயரின் பின்புறம்மிக பெரிய "கோசாலை அமைக்கப்பட்டுள்ளதுஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளனஇதில்கறக்கும் பாலினை சுவாமிகளுக்கு அபிஷேகத்திற்கும்நைவேதியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்

மேலும்குழந்தைகள் படிக்க வேத பாடசாலை கட்டப்பட்டு வருகின்றனஇவைகளை பார்த்துவிட்டுஆஞ்சநேயரை தரிசிக்க சென்றோம்நாம் ஆஞ்சநேயரின் முன்பு நின்றதும்கிளிகள் கூட்டம்  கோவிலின் மேலே பறந்துக் கொண்டிருந்தது. இந்த காட்சி மிக அழகாக இருந்தது.

கோவில் உருவான விதங்கள்ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொண்டார் கோவில்  நிர்வாகியும்ஆஞ்சநேயர் உபாசகருமான வாசுதேவன்எனக்கு ராம ஜெயந்தியை கின்னஸ் ரெக்கார்ட் செய்யவேண்டும் என்பது  ஆசைஅதனால்வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி 21 நாட்கள் இடைவிடாது ராம ஜபம் செய்தேன்.


தில்அனுமாரே நேரடியாக பிரசன்னம் ஆகி "இப்படி கடுமையாக தவம் இருக்கிறாயே உனது ஆசை என்னஎன்று கேட்டார். "எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்சுபிக்ஷமாக இருக்க வேண்டும்நீ என்னுள் வரவேண்டும்''. என நான் கூறிய அந்த நொடியே, "இந்த தருணத்தில்  இருந்துஉன் மனசில் நான் இருப்பேன்இந்த கிரகத்தில் நான் இருப்பேன்பக்தர்களின் நியாயமான குறைகளை  என்னிடம் நீ தெரிவித்தால், அதனை நான் நிவர்த்தி செய்வேன்இன்று முதல் அது நடக்கும்'' என்று ஆஞ்சநேயர் சொன்னார்அடுத்த மூன்றாவது நாட்கள்முக்கால் அடி ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒன்றை என் மகன் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான். 

"நான்தான் வந்துருக்கேன்உன் வீட்டிலேயே பிரதிக்ஷ்டை  செய்என்றார் அனுமார்அதன் பின் பத்தர்கள்அனுமாரை தரிசிக்க வரத் தொடங்கினர்பக்தர்கள் தெரிவிக்கும் குறைகளைஅனுமாரிடம் தெரிவிப்பேன்பல பக்தர்களின் குறைகளை அனுமார் நிவர்த்தி செய்திருக்கிறார்.

ரு பக்தருக்குகடும் நோய் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்அவரின் மனைவி என்னிடம் வந்து, "என் கணவருக்கு இந்த நோய் எப்போது குணமாகும்என்று கேட்டார். "உன் குலதெய்வமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்குகீழிருந்து மேலே நடந்து சென்று வா.. சரியாகிவிடும்என்றேன்.  அவர்  சென்று வர, பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.

துபோல், ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டுள்ள பலருக்கும்  வாழ்வில் எட்ட முடியாத  உயரங்களை அடைய செய்துள்ளார், இந்த உயரமான ஆஞ்சநேயர்

னிக்கிழமைகளில், இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வருகை தந்து சிறப்பு செய்வார்கள்அன்று நாள் முழுவதும், பக்தர்களை பார்த்த மகிழ்ச்சியில் ஆஞ்சநேயர் காணப்படுபவார்.

ந்த 37அடி உயரமுள்ள "சஞ்ஜீவன ஆஞ்சநேயர் கோயிலின்பூமி பூஜை செய்ய இவர்கள்தான்பணஉதவிகளை செய்தார்கள்

ப்படியாகபலரும் உதவிசெய்ய கோயிலை கட்ட மேலூரில் உள்ள  தோப்பை விலைக்கு வாங்கினேன். "தெற்கு பார்த்து நான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறேன்விஸ்வரூபமாக நான் வரப்போகிறேன்எனக்கு 33 அடியில் கோயிலை கட்டுஎன எனக்கு உத்தரவிட்டார் ஆஞ்சநேயர்.

ங்கெங்கோ தேடிப்பார்த்தோம், 33அடியில் கற்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்திற்கு, 6 அடி அளவில்  ராமர் விக்ரஹம் செய்ய  ஆரம்பிதோம். ராமர் உற்சவர் அதாவது ராமர் விக்ரஹம்தான் முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்த மறுநாளே, ஆஞ்சநேயரின் தீவிர பக்தர் ஒருவர்  போன் செய்து. ``அனுமாருக்கு தேவயான கற்களை தேடி எடுத்து விட்டோம்'' என்று சொன்னதும் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது

ஞ்சநேயரின்தலை முதல் பாதம் வரை 37 அடியும்பீடம் 4 அடியும் ஆகமொத்தம் 41 அடியில் கட்சிதமாகசிற்பிகள் செய்து கொடுத்தார்கள்ஆஞ்சநேயர் கையில்ஜெப மாலை உள்ளதுசதா.. ராமரை நினைத்து ராமஸ்மரணம் செய்துக்கொண்டிருக்கிறார்

ஞ்சநேயர் தெற்கு நோக்கி இருப்பதால்லோகம் சுபிக்ஷமாக இருக்கும்.  ஆஞ்சநேயரின் மொத்தம் எடை 108 டன்எப்படி எடுத்து செல்வது என்பதில்குழப்பம் ஏற்பட்டதுஅந்த நேரத்தில், "முதல் முதலில் லாரி வாங்கி உள்ளோம் ஆஞ்சநேயரை நாங்கள் கொண்டு வருகின்றோம்"என சென்னையில் இருந்து ஒருவர் தேடிவந்தனர்

ட்டுனர்கள்ராம மந்திரங்கள்சுந்தர காண்டம்அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்தவாரே லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்வண்டியின்டயர்கள் ஓட..ஓட...ராம்...ராம்...ராம் என்று சொல்லக்கூடிய ஒலிக்கருவிகளை பொருத்தினார்கள்

தை கேட்டுக்கொண்டே வந்தோம்எங்கும் தடையில்லாமல்  ஸ்ரீரங்கம் அருகில்மாம்பழச்சாலை என்னும் இடத்தில் நள்ளிரவு 1மணிக்கு வந்தடைந்தோம்எப்படி ராமாயணத்தில் தன் உடலை சுருக்கிக்கொண்டு  காரியங்களை சாதித்துக்கொண்டாரோ, அப்படி ஒரு ஆச்சரியம் இங்கும் நடந்தது

ம்! மேலூர்  சாலையின் அகலம் 11 அடி, அனுமாருடன்  வண்டியின் அகலம் 10.45 அடி, எந்த ஒரு இடையூறும் இல்லாம்தன் 37அடி உருவத்தை சுருக்கிக்கொண்டுஇந்த கிராமத்திற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக  வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.   

லாரியில் இருந்து தூக்கிபிரதிக்ஷ்டை செய்ய உதவுவதற்காக எல்&டி(L&T) கம்பெனியை நாடினோம்உடனடியாகமறுக்காமல் செய்து கொடுத்தார்கள்எனக்கும் சந்தோஷம்அனுமாருக்கும் சந்தோஷம்

யஸ்து விஷ்ணு க்ருஹம் குர்யாத் வைகுண்டே தஸ்ய மந்திரம்

யஸ்து பிம்பம் ஹரே: குர்யாத் ஸது விஷ்ணோ லயம் வ்ரஜேத்

ஸபாம் மண்டபம் ரம்யம் சர்வம் தஸ்ய வ்ரஜேத் பரேஅம்பரே

பவேதமலே தாம்னி பரஸ்மிந்நேவ லீயதே''


கோயில் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ராமர்,  அகஸ்தியரிடத்தில் கூறியுள்ளார். அதில், கோயில் மற்றும் அதன் சார்ந்த வேலைகளை யவர் ஒருவர் செய்கின்றார்களோ அவர்களின் இல்லதிலேயே இறைவன் எப்பொழுதும் குடி இருப்பான் என்கிறார். அதன் படியே நானும், அனுமாரின் பக்தர்களும் திருப்பணிகளை செய்து வருகிறோம்இந்த கோயிலுக்கு, "தென் அயோத்தி ஸ்ரீ ராம பட்டாபிஷேக சஞ்ஜீவன ஆஞ்சநேயர் " என்று பெயர் வைக்கவும் என்று ஆஞ்சநேயர் எனக்கு உத்தரவிட்டார்அது போலத்தான்பெயர் வைத்துள்ளேன்.       

ன்னும்  முழுமையான திருப்பணிகள் முடியவில்லைநரசிம்மர்சக்கரத்தாழ்வார்ராமர் போன்றவர்களுக்கு கிழக்கு பார்த்து சந்நதிகள்  அமைக்க வேண்டும்வேத பாடசாலைஅமைக்கப்பட்டு வருகிறது. "கோசாலைகளை விரிவுப்படுத்தி வருகிறோம்இவைகள் எல்லாம் நல்லபடியாக நிறைவடைய வேண்டும்.

க்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயரை சேவித்துதுன்பம்  விலகி நன்மை பெறவேண்டும்மேன் மேலும்இந்த மேலூர்  கிராமம் பல நன்மைகளை பெற்று வளம் பெறவேண்டும்எனக்கேட்டுக்கொண்டார்.


எப்படி செல்வது:

திருச்சி
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து, மேலூர் கிராமத்திற்கு செல்ல மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்வதால், ஆட்டோ அல்லது தனி வாகனம் மூலமாக செல்வது சிறப்பாகும்.

                                                                                        சந்திப்பு: ரா.ரெங்கராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 29.12.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்