சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்? / கேள்வி - பதில்
சுகப்பிரசவம் நடக்க என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
- ஆதிலட்சுமி, ராஜபாளையம்.
பகவான் கண்ணனை நினைத்துக் கொள்ளுங்கள்.“வசுதேவ சுதம் தேவம் கம்ச
சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம்
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்”
- என்ற சுலோகம் சொல்லுங்கள்.
திருச்சிராப்பள்ளி தாயுமானவஸ்வாமியை பிரார்த்தனை செய்யுங்கள். அம்பாளை
வணங்குபவர்களுக்கு இந்த சுலோகம் உதவும்.
``நமஸ்தேஸ்து ஜகன்மாத: கருணாம்ருத ஸாகரே
கர்ப்ப ரக்ஷாகரி தேவி ஸுகப்ரசவ மேவஹி!’’
இந்த
ஸ்லோகத்தைச் சொல்லி அம்பிகையை தினமும் வழிபடுங்கள். “உயிர்களுக்கெல்லாம்
தாயாக இருப்பவளே! கருணைக் கடலாகத் திகழ்பவளே! கருவில் உள்ள உயிரைக்
காப்பவளே! சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவாய்’’ என்பது இந்தச் சுலோகத்தின்
பொருள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 28.01.2025
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக